பத்த வச்சுட்டியே பரட்டை.

Sunday, October 31, 2004

சந்திரமுகிக்காக சமாதான படலம்-விகடன்

எந்த செய்தியையும் எப்படியும் மற்றி எழுத முடியும் என எங்களால் மட்டுமே(விகடன்) முடியும் என நிருபிக்க சந்திரமுகிக்காக சமாதான படலம் தயாரித்துள்ளீர்கள். ரஜினி எதை செய்தாலும் குற்றம் காண முயற்ச்சித்து தோற்கிறீர்கள். ரஜினியின் ஆண்மீக ஈடுபாடு அனைவரும் அறிந்ததே. அப்படி இருக்க அதையும் அரசியல் ஆக்கப் பார்க்கிறீர்கள்.

ரஜினி எதிர்க்கும் போது கூட சமமான பலம் உள்ள எதிரியை தான் எதிர்த்து பழக்கம். 1996 ஆம் ஆண்டு ஜெயலலிதாவை எதிர்க்கும் போது ஜெயலலிதா அவர்கள் தமிழக முதல்வர். ஒரு முதல்வரையே எதிர்த்த துணிச்சல் உள்ளவர் ஒரு ஜாதிக்கட்சி தலைவருக்கு பயப்படுவாரா. அப்படி பயந்திருந்தால் ரஜினி இந்த தேர்தல் சமயத்தில் ராமதாஸ் அவர்களை வன்முறையின் ராஜா என் கூறியிருப்பாரா.

தேர்தல் சமயத்தில் ராமதாஸ் மகன் அன்புமணி ரஜினியின் மக்கள் செல்வாக்கை கண்டு பயந்து ரஜினியுடன் பேசியாச்சு சுபம் என்று கூறியதை மறந்து விட்டீர்களா? ரஜினிக்கு எதிரியிடம் எதிர்த்து நின்று ஜெயித்து தான் பழக்கம் .இப்படி அரசியல்வாதிகளை போல் காலில் விழும் பழக்கம் இல்லை. ரஜினி எதிர்க்கும் அளவுக்கும் இன்னும் ராமாதாஸ் வளரவில்லை.

ரஜினி பணத்திற்க்காக படம் எடுப்பவர் அல்ல. கோடிக்கணக்கான ரசிகர்களின் வேண்டுகோளுக்காக எடுக்கப்பட்ட படம். அதை பிரச்சனை வந்தால் காப்பாற்றும் சக்தி ரஜினிக்கும், அவரது ரசிகர்களுக்கும் உண்டு. ரஜினி படத்திற்கு பிரச்சனை வரலாம் என்று தெரிந்து தான் வினியோகஸ்தர்கள் சிவாஜி புரடக்சனில் காத்து கிடக்கிறார்கள். காரணம் மற்ற நடிகர்களைபோல் பிரச்சனை வந்தால் ஓடி ஒழிவதை போல் இல்லாமல் பிரச்சனைகளை வெற்றி கொள்ளும் சக்தி ரஜினிக்கு உண்டு என்று அறிந்ததால்.

ரஜினி படத்தை ஒரு ஏரியாவிற்கு 2 நிமிடம் என்ற கணக்கில் 20 நிமிடத்தில் விற்று விடுமளவுக்கு வினியோகஸ்தர்கள் தயாராக இருக்கிறார்கள் என்று ராம்குமார் அவர்கள் பேட்டி கொடுத்ததை படிக்க மறந்து விட்டீர்களா.

பங்காரு அடிகளார் பஞ்சாயத்து பண்ணும் சாமியார் என்ற அர்த்தத்தில் இதை எழுதினீர்களா அல்லது எதை எழுதினாலும் ரஜினி பதில் அறிக்கை கொடுத்து நம் பத்திரிக்கையை பரபரபாக்க மாட்டேன்கிறார் என்ற ஆதங்கத்தில் எழுதினீர்களா என்று தெரியவில்லை. எந்த அர்த்ததில் எழுதினாலும் தனி நபர் பற்றி பொய் விமர்சனம் செய்வது தரமான விகடனுக்கு கரும்புள்ளி தான்.

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Friday, October 29, 2004

கிரிக்கெட்டு கிரிக்கெட்டு

நமது தற்போதைய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலிய அணியிடம் அடிவாங்கிக் கொண்டிருக்கிறது. நமது அணியின் முன்னனி பேட்ஸ்மேன் அனவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க கடைசி வீரர்கள் அனைவரும் பேட்ஸ்மேன் போல அழகாக விளையாடுகிறார்கள். ஸ்கோர் போர்ட ரிவர்ஸ் ஆர்டர்ல பார்த்தா தான் கொஞ்சமவது சந்தோசம இருக்கு.

இந்த தொடரில் விளையாடிய சோப்ரா ஒரு டெஸ்ட்டில் கூட சோபிக்க வில்லை. இருந்தாலும் அவருக்கு எந்த அடிப்படையில் தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கப்படுகிறது என்று தெரியவில்லை. அவருக்கு பதிலாக ரமேஷ், S.S.தாஸ் போன்றவர்களுக்கு வாய்ப்புகள் வழங்கியிருக்காலாம். லக்ஷ்மனன் க்கு பதிலாக வேறு ஒருவருக்கு வாய்ப்புகள் வழங்கியிருக்கலாம். பட்டேலை பேட்ஸ்மேனாக வேண்டுமானல் சேர்த்து கொள்ளாலாம். கீப்பருக்கு ஒத்து வராது. தினேஷ் கார்த்திக்கு வாய்ப்பு வழங்கியிருக்கலாம்.

ஸ்டீவ் வாக் சில மேட்ச்களில் சொதப்பியதற்கே ஓய்வு கொடுத்து விட்டார்கள். ஆனால் இங்கு ஒரு மேட்ச் நன்றாக விளையாடினால் அதை வைத்தே ஒரு வருடம் கிரிக்கெட்டில் குப்பை கொட்டும் அணி இந்திய அணி தான். நமது அணி வீரர்கள் மட்டுமே(விளையாட்டில் மட்டும் அல்ல நிஜத்திலும்) அடிப்பட்டு ஓய்வில் இருக்கும் நாட்கள் அதிகம். மெக்ராத் தன் 100வது கிரிக்கெட் சாதனைக்கு காயம் காரணமாக நான் விளையாடமல் இருந்தது இல்லை என்று கூறியதே நமது அணிக்கு எப்பொழுது புரியுமோ?

என்று விளம்பரத்தில் பணம் சம்பாதிக்க ஆரம்பித்தார்களோ அன்றே கிரிக்கெட் விளையாடுவது விளம்பரம் அணிந்து வரும் இடமாக மாறிவிட்டது. கிரிக்கெட்டில் வெற்றி தோல்வி சகஜம் தான். ஆனால் போராடி தோல்வி அடைந்திருந்தால் பராவாயில்லை. கடைசி டெஸ்ட்டில் ஜெயித்து(ஜெயிக்காட்டியும் பராவாயில்லை, தோந்துராதிங்கப்பா) 1- 2 என்ற கணக்கிலாவது தோற்க முயற்ச்சிக்கலாம்.ஒருநாள் தொடரையாவது ஜெயிக்கப் பாருங்க.

35 வருட சாதனை போயே போச்சு. புதுசா சாதனை பண்ணாட்டியும் பரவாயில்லை. இருக்குற சாதனையாவது காப்பாத்துங்க ராசா.
Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Thursday, October 28, 2004

கவர்னரும் அரசியலும்

மாநில பிரச்சனைகளை கவனிக்க வேண்டிய கவர்னருக்கே தமிழகத்தில் பிரச்சனை. மாநில சட்டம், ஒழுங்கு, நடவடிக்கைகள் பற்றிய அறிக்கைகளை மத்திய அரசுக்கு அனுப்பும் ஒரு அரசு அதிகாரி தான் கவர்னர். இந்த கவர்னர் தான் என்னை கண்கானிக்க வேண்டும் என்று (கவர்னர் மாற்றல் உத்தரவு அறிவிப்பதற்கு முன்) உச்ச நீதிமன்றம் வரை ஜெயலலிதா அவர்கள் சென்றிருப்பது தமிழக கவர்னர் ராம்மோகன்ராவ் அவர்கள் தன் வேலையை சரியாக செய்யாமல் ஜெயலலிதா சொல்படி நடப்பவரோ என் வரும் சந்தேகம் நியாயமானதே.

ஜெயலலிதாவும், கவர்னரும் தங்கள் வேலையை சரியாக செய்திருந்தால் இந்த பிரச்சனை அரசியல் ஆகியிருக்காது. மத்திய அரசு தன் கூட்டனி கட்சிகளை திருப்தி படுத்துவதற்காக மட்டும் கவர்னரை மாற்றினால் அரசியலமைப்பு கேலி கூத்தாகிவிடும்.

முன்பு ஒருமுறை கவர்னராக இருந்த சென்னா ரெட்டி அவர்களை வேண்டாம் என்று கூறினார். இப்போது ராம்மோகன்ராவ் அவர்கள் தான் வேண்டும் என்கிறார். கவர்னரை தன் (மந்திரிகளை போல்) விருப்பப்படி ஆட்டுவிக்க நினைப்பது சரியல்ல. கவர்னர் பதவி தேவையில்லை என்று கூறிய கலைஞர் கவர்னரை மாற்ற மறைமுகமாக முயற்ச்சிப்பது ஏன் என்று தெரியவில்லை. ஜெயலலிதா,கலைஞர் சன்டையில் கவர்னர் தப்ப முடியாது. அது மட்டும் நிச்சயம்.

இப்பொது கவர்னர் மட்டும் அல்லாமல் சில அரசு அதிகாரிகளும் வேலைக்காக/பதவிக்காக எந்த கட்சிக்கும் ஜால்ரா அடிக்க தயாரகிவிட்டார்கள் என்பது மட்டும் உன்மை.

கவர்னரை மாற்றினால் தமிழகத்துக்கு எதாவது நல்லது நடக்குமா?
Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Friday, October 22, 2004

டார்ச்சர் கண்ணா டார்ச்சர்

சென்னையில் மட்டுமாவது ஒவ்வொரு வீட்டுக்கும் வந்து இலவசமாக புத்தகம் கொடுத்தால் சாதனை ஒரு கோடியை தாண்டும். அதை விட்டு விட்டு இப்ப்டி உங்கள் டீவி என்பதற்காக நிமிடத்திற்கு ஒரு விளம்பரம் கொடுத்து டார்ச்சர் பண்ணாதிர்கள். (அடுத்த இதழ் வீட்டுக்கே வந்தால் நான் பொறுப்பல்ல) நாளை எதாவது முறுக்கு, கடலை மிட்டாய், பாப்கார்ன், தீப்பெட்டி வாங்கினால் குங்கும இலவசம் கண்ணா இலவசம்னு வரலாம். என் நண்பன் பகலில் (ரும்ல டீவி இல்ல-டார்ச்சர் குறைஞ்சது) சூரியன் FM மாத்துனா ரேடியா டர் அகிடும் கண்ணானு மிரட்டுறான்.

குங்குமம் வார இதழுக்கு திடிரென ஏன் இந்த முக்கியத்துவம்? காரணம் அடுத்தாவது ஆட்சியை பிடிக்க வேண்டுமே. (தேர்தல் வர இன்னும் ஒரு வருசம் இருக்கு இப்பவே அம்மா அதிரடி அறிவிப்புகள் அள்ளி விடுறாங்களே. தாத்தாவுக்கு பயம் வந்துடுச்சு.) டீவி யில சன் டீவிக்கு மக்கள் முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பிச்சிட்டாஙக. செய்திதாளில் சில பேர் தினகரன் (நேற்று இதுக்கும் fair & lovely இலவசமா கொடுத்தாங்கலாம்) படிக்கிறாங்க, சில பேருக்கு முரசொலி படிக்க வேண்டிய கட்டாயம்.

இருந்தாலும் குமுதம், விகடன் அப்பப்ப மஞ்ச மாக்கான் அப்படி இப்படினு அவங்க தண்ட வாளத்த எழுதிறாங்க. அவங்க குட்டும் அம்பலமாகிடுது. அதனால முதல்ல பைக் ஓட்டிட்டு போ சொன்னவங்க இப்ப இலவசமா பொருட்களை கொடுத்து மொத்த மீடியாவை தன் கையில் கொண்டு வர முயற்ச்சிக்கிறார்கள். போட்டியா நமது M.G.R. க்கும் அம்மா விளம்பரம் கொடுத்தா தமிழகம் தாங்காது சாமி.

ஆனா இதே நிலமையில் போன சன் டீவி பாக்கவும் இலவசமா எதாவது கொடுக்க வேண்டிய நிலமை வரும். ஆக மொத்தம் எந்த அரசியல் கட்சியும் மக்களுக்கு நல்லது செஞ்சு ஓட்டு வாங்க தயாரில்லை.

ஆக மொத்தம் குங்குமம் இலவசம் கண்ணா இலவசம். மக்களுக்கு டார்ச்சர் கண்ணா டார்ச்சர்.
Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Wednesday, October 20, 2004

அழிக்கப்பட்டான் அரக்கன்!

தமிழக அதிரடிபடையின் அதிரடி முயற்சியில் அரக்கன் வீரப்பன் அழிக்கப்பட்டான். வீரப்பனை சுட்டுக்கொன்ற அதிரடிப்படை வீரர்கள் அனைவருக்கும் மற்றும் அவர்களுக்கு அனைத்து உதவிகளையும் வழங்கிய தமிழக அரசுக்கும் வாழ்த்துக்கள். இவன் காட்டுக்குள் நடத்தி வந்த தர்பார் முடிவுக்கு வந்தது.

இவன் செய்த கொலைகள், கொள்ளைகள் கணக்கில் அடஙகாதவை. ஆனால் இப்படி பட்ட கொலைகாரனை தன் ஜாதியை (மரம் வெட்டுர ஜாதியா?) சேர்ந்தவன் என்ற காரணத்திற்காக வீரத்தமிழன் என்றார் Dr. ராமதாஸ். நக்கிரன் கோவாலு வீரப்பனின் கொ.ப.செ. அளவுக்கு புகழ்ந்து தள்ளினார். சன் டீவி இதிலும் தன் வேலையை காமித்து வீரப்பனையும் ஜெயலலிதாவை திட்ட வைத்து சாதனை புரிந்தது.

கொள்ளையனயும், கொலைகாரனையும் வீரனாக சித்தரித்தவர்களுக்கு மத்தியில் ரஜினி காந்த் அவர்கள் வீரப்பனை அழிக்கப்பட வேண்டிய அரக்கன் என்றார். வீரப்பனை வீரத்த்தமிழனாக சித்தரித்து வைத்திருந்த ராமதாஸால் இதை பொறுக்க முடியவில்லை. (இதனால் பாபா படத்திற்கு பிரச்சனைகளை ஏற்படுத்தியும் அதன் மூலம் ரஜினியால் வன்முறையின் ராஜா என் வாங்கி கட்டிக் கொண்டது யாவரும் அறிந்ததே).

ரஜினி சொன்னது போல் வீரப்பன் என்ற அரக்கன் அழிக்கப்பட்டான். இப்படி பட்ட கொலைகாரர்களை கைது செய்து அவனுக்கும் VIP போல் பாதுகாப்பு கொடுப்பதை விட அழிப்பதே மேல். குற்றம் செய்ய நினைப்பவர்களுக்கு ஒரு பயமாக, பாடமாக அமையட்டும்

அவன் உயிரோடு இருக்கும் போது அவனை வீரனாகாவும், நல்லவனாகவும், தியாகியாகவும் சித்தரித்தவர்கள் இன்று அவன் கொல்லப்பட்ட பிறகு அழித்தது சரி என்றும்,கொலைகாரன் என்றும் ஒப்புக் கொண்டு அறிக்கை விடுகின்றனார். நல்ல வேளை எந்த கட்சியும் அரைக்கம்பத்தில் கொடியை பறக்க விட்டு அனுதாபம் தெரிவிக்க வில்லை.

என்ன வீரப்பனை கைது செய்து இருந்தால் இந்த ஆட்சியில் கருனாநிதியை பற்றியும் அடுத்து கருனாநிதி ஆட்சியைப் பிடித்தால் ஜெயலலிதாவை பற்றியும் அவன் அறிக்கை விடும் காமெடியை பார்த்திருக்கலாம். MLA அல்லது MP தேர்தலில் வேட்பாளாராகி ஓட்டு கேட்க வரும் காட்சியையும் பார்க்க முடியாமல் போய்விட்டது.

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Monday, October 18, 2004

தங்க தாரகை விருது

தமிழக முதல்வர் அவர்களுக்கு தங்க தாரகை விருது வழங்கப்பட்டிருக்கிறது. பாலின பாகுபாட்டை போக்க பல நடவடிக்கைகள் எடுத்தமைக்காக இந்த விருது வழங்கப்பட்டது. ஆனால் இந்த விருதை தன் கட்சி விழாவைப்போல் அமர்க்களப்படுத்தியிருக்கிறார். கடற்கரை சாலை முழுவதும் தொண்டர்கள் படை சூழ விருது வாங்க சென்றார். இந்த விருதுக்கு இவ்வளவு அமர்க்களம் ஏன்?

தன் செய்த சில தவறான முடிவுகளால் கடந்த நாடளுமன்ற தேர்தலில் தோல்வி அடைந்தார். இந்த விருதின் மூலம் தான் எடுத்த முடிவுகள் அனைத்தும் சரியானவையே என மக்களுக்கு நிருபிக்க இந்த விருதை பயன் படுத்தியிருக்கிறார்..

ஐ.நா அங்கிகாரம் பெறாத அமைப்பு என் ஜெயலலிதாவிற்கு தெரிந்து இருந்தும் தன் தவறுகளை மறைக்க முயர்சித்திருக்கிறார். ஜெயலலிதா அட்சி நடத்துவது தமிழக மக்கள் தான்.அவர்களிடம் இருந்து நல்ல முதல்வர் என்ற விருதை பெருவது தான் அவருக்கு பெருமை.

ஆடம்பரத்தால் மக்களை ஏமாற்ற முயற்சிக்காமல் மக்கள் விரும்பும் அட்சியை கொடுக்க முயலுங்கள். ஆடம்பரம் ஜெயலலிதாவின் வழக்கம் என்றால் கலைஞர் விருது வழங்கும் அமைப்பு ஐ.நா அங்கிகாரம் பெற்ற அமைப்பு அல்ல என்று தேடி கண்டுபிடித்துள்ளார். இதை கண்டு பிடிக்க காட்டிய வேகத்தை எல்லா செயல்களிலும் பயன்படுத்தியிருக்கலாம்.

யார், எந்த அமைப்பு விருது வழங்கினாலும் அதை பாராட்ட மனம் இல்லா விட்டலும் விமர்சிக்க கூடாது. பாலின பாகுபாட்டை போக்க எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை அதனால் இந்த விருது ஜெயலலிதாவிற்கு பொருந்தாது என்று சொல்லுங்கள் என்று ஏற்றுக் கொள்கிறோம். அதை விட்டு விட்டு அங்கிகார பெறாத அமைப்பு என்றெல்லம் கூறுவது பொறாமையின் வெளிப்பாடாக தோன்றும்

ஜெயலலிதா விற்கு தங்க தாரகை விருது. கலைஞருக்கு செம்மொழி தந்த வீரர் விருது. தமிழகம் ஒளிரும்!!

மக்களுக்கு ஏமாளி விருது கிடைக்காமல் இருந்தால் சரி.


Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.