பத்த வச்சுட்டியே பரட்டை.

Sunday, August 10, 2008

விகடனுக்கு சுளீர்

ரஜினி சென்னை போராட்டத்திற்கு பேசிய மறுநாள் கொடுத்த கன்னட தொலைக்காட்சிக்கு கொடுத்த பேட்டியில் 'கன்னட மக்கள் அனைவரையும் உதைக்க வேண்டும் என சொல்ல நான் என்ன முட்டாளா வன்முறையில் ஈடுபடுகிறவர்களை தான் உதைக்க வேண்டும் என்று சொன்னனே" என்று விளக்கமளித்தார்

இப்போதும் நான் பேசியது தவறாக புரிந்து கொள்ள பட்டது அதனால் இனிமேல் சரியாக யோசித்து பேசுகிறேன். அதனால் என் படத்தை கர்நாடகாவில் ரிலிஸ் செய்ய அனுமதிக்க வேண்ண்டும் என வேண்டுகோள் கொடுத்தார்.

போராட்ட அடுத்த நாள் கொடுத்த விளக்கத்திற்கும் இப்போது கொடுத்த விளக்கத்திற்கும் பெரிய வித்தியாசம் இல்லை. ஆனால் இப்போது குசேலன் படம் வெளியானதால் அதை பிரச்சனையாக்கி ஆதாயம் தேட மோசமாக 'ரஜினிக்கு சுளீர்" என கட்டுரை எழுதி உள்ளிர்கள். எல்லாரும் ரஜினியை திட்டி எழுதுகிறார்கள் அதனால் கூட்டத்தோடு கூட்டமா நீங்களும் கட்டுரை எழுதி உங்கள் தமிழ் பற்றை(?) காட்டி கொண்டிர்கள்.

ஜெயலலிதா காவிரி பிரச்சனைக்காக உன்னாவிரதம் இருந்த பொது மலர்செண்டு கொடுத்ததர்க்காக பாலச்சந்தர் தயாரிப்பில் உருவான அண்ணாமலை படத்தை ரிலிஸ் செய்ய பிரச்சனை பண்ணினார்கள். ரஜினி சுயநலவதியாக இருந்தால் மலர்செண்டு கொடுத்தர்க்கே படம் ரிலிசுக்கு பிரச்சனை பண்ணியவர்கள் உதைப்பேன் என்று சொன்னால பிரச்சனை பண்ணுவார்கள் என்று யோசிக்கமலா பேசியிருப்பார்.

காவிரி நடுவர் மன்ற தீர்ப்பு தமிழகத்துக்கு சாதகமா வந்துவிட்டது என் கருதி சிவாஜி பட ரிலிஸ் பண்ணும் போது பிரச்சனை பண்ணினார்கள். அது ரஜினிக்கு எதிரான பிரச்சனையா இல்லை தமிழ் படத்திக்கு எதிரான பிரச்சனையா? அவர்கள் ரஜினிய தமிழனாக கருதியதால் தான் சிவாஜி படத்திற்கு எதிராக பிரச்சனை பண்ணினார்கள். தமிழ் மீடியா மட்டும் தான் ரஜினி தமிழனா என 30 வருடமாக சோதித்து கொண்டிருக்கிறது.

குசேலன் கர்நாடக ரைட்ஸ் ரஜினிக்கு போகும் அதனால் தான் வருத்தம் தெரிவித்தார் என்றால் ரஜினி ராகவேந்திரா மண்டபம் மற்றும் தமிழக மக்களுக்கு செய்த உதவியை ஒப்பிடும் பொது அந்த பணம் தூசி தான். விகடனை போல வாசகர்களிடம் வசூல் பண்ணி நிதி கொடுப்பதை போல இல்லாமல் ரஜினி தன் சொந்த பணத்தில் நிதி வழங்கியவர். இது கூட தெரியாமல் ரஜினிக்கு சுளீர் கொடுக்கிறாராம் ஒரு ரிப்போர்டர் அதை ஒரு ஆசிரியர் அப்ருவ் பன்னுரரம். கிசு கிசு எழுதுனவர்களிடம் கட்டுரை எழுத சொன்னால் இதை தான் எழுதுவார்கள்

ரஜினிக்கு தமிழ் பற்று இல்லை அதனால் தான் மன்னிப்பு கேட்டு விட்டதாகா நிங்கள் கருதினால் ரஜினியை பத்தி விகடனில் எழுதாமல் இருக்க நீங்ககள் தயாரா? ரஜினி பாபா படம் எதிர்பார்த்த அளவுக்கு வசூல் ஆகவில்லை என பணம் திருப்பி கொடுத்தார் அதுபோல் உருப்படியில்லாத உங்கள் இதழை வாங்கிய எங்களுக்கு பணம் திருப்பி கொடுக்க தயாரா?

இதுபோல் கட்டுரை எழுதிய உங்களுக்கு சுளீர் கொடுப்பதை விட விகடனையும் படிக்காமல் விடுவது தான் உத்தமம்.
Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

8 Comments:

  • At 5:20 AM, Blogger E-Farmers said…

    Kalkkal Raja...

    Romba niyama eluthi irukeenga... keep it up..

    anbudan
    Thinakar

     
  • At 6:14 PM, Blogger Raja said…

    நன்றிங்க Thinakar

     
  • At 8:09 PM, Anonymous Anonymous said…

    well written. Ungalai migavum appriciate panren.

     
  • At 11:13 PM, Blogger Kevin Matthews said…

    நீங்க என்னதான் சொன்னாலும் ரஜினி தமிழர் இல்லை என்பதுதான் உண்மை. காக்கை என்னதான் அன்ன பறவை மாதிரி நடந்து கொண்டாலும் காக்கை காக்கை தான். அவர் படம் ஓடுவதற்காக மன்னிப்பு கேட்கட்டும் யார் காலிலும் விழட்டும். அது அவரது தனிப்பட்ட விஷயம். இதில் இன பிரச்சினை எங்கிருந்து வந்தது என்று தெரியவில்லை.

     
  • At 1:49 AM, Blogger Unknown said…

    ரஜினி தமிழர் இல்லை. சரி ஒரு வாதத்டிற்க்கு ஒத்திக் கொள்வோம். தமிழர்களாகிய மற்றவர்கள் என்ன கிழித்து விட்டார்கள்? இதில் முக்கியமாக நான் குறிப்பிடுவது திரு.கருணாநிதியை. உதயகுமார் கொலை வழக்கு முதல் ஒகனேக்கல் திட்டம் வரை அவரது சாதனைகள் ஏராளம்.

     
  • At 1:58 AM, Blogger mareeskannan said…

    Dear Raja,

    What a great comment...
    "இதுபோல் கட்டுரை எழுதிய உங்களுக்கு சுளீர் கொடுப்பதை விட விகடனையும் படிக்காமல் விடுவது தான் உத்தமம்."

    really, we must avoid to read vikatan and Kumdam.

    Marees Kannan
    Chennai - 89

     
  • At 4:35 AM, Anonymous Anonymous said…

    rajini tamila illa kannadava atha naama paarkka kudathu. ethuvum pesarathukku munnadi yosichu pesanum. film la herova irukkarathu correcta ezhuthi koduthutha dialogue pesi claps vaangarathu periya visayam illa. atha real life la follow pannanum. rajini sir na annaikku pesainathu thappa mean pannitinga, na vera mathiri sonnennu solla kudathu. correcta pesanum. annaikku vera innaikku veraya pesakudathu.

     
  • At 1:35 AM, Blogger gundumama said…

    விடுங்க தலைவா. இவனுங்க ரொம்ப யோகியமா? இதே விகடன் தான் ஒரு நாள் ரஜினியை தலைல தூக்கி வச்சு ஆடுச்சு. இவ்ளோ தூரம் கன்னட காரர்களை பற்றி தப்ப எழுத்தும் விகடன் இன்னும் தான் கரநாடகாவில் விற்கிறது. அது எதாச்சும் பங்கம் வரும்னு தெரிஞ்ச.. இவங்களே ஓடி வந்து மன்னிப்பு கேப்பாங்க. இவங்க செஞ்ச வியாபார தந்திரம், ரஜினி செஞ்ச மானகேடு. சுத்த பேத்தல் !

     

Post a Comment

<< Home