பத்த வச்சுட்டியே பரட்டை.

Tuesday, August 16, 2005

ரஜினியை விமர்சிப்பவர்களுக்கு

உப்பிட்ட தமிழ் மன்னை மறக்காததால் தான் இது வரை தமிழன் பிரச்சனைக்கு மட்டும் குரல் கொடுக்கிறார். கலவரநிதி,வெள்ள நிதி என அவர் பணம் வழங்கியது எல்லாம் தமிழ் நாட்டுக்கு மட்டும் தான்.

காவிரி பிரச்சனை வருவதற்கு காரணம் ரஜினி மாதிரி அல்லவா பேசுகிறீர்கள். என்றைக்காவது கர்நாடகத்திற்கு ஆதரவாக குரல் கொடுத்திருக்கிறாரா.ஜாதி,மதம் மட்டும் அல்லாமல் காவிரி,தமிழ் என கிடைத்ததை எல்லாம் வைத்து அரசியல் பண்ணும் அரசியல்வாதிகளை பற்றி கவலைப் பாடாத நீங்கள் ரஜினியை மட்டும் விமர்சிப்பது ஏன்.

எனக்கு MGR பிடித்த காலத்தில் கூட கலைஞர் பேச்சு தான் பிடிக்கும். அதற்காக அவர் கூறும் கருத்துக்கள் எல்லாம் ஏற்றுக் கொள்கிறேன் என்று அர்த்தம் அல்ல. வட்டாள் நாகராஜ் கூட தன் பிள்ளைகளை ஊட்டி கான்வென்டில் தான் படிக்க வைக்கிறார்.இங்குள்ள அரசியல்வாதிகளைப் போல.

கார்கில் நிதிக்கு கூட எல்லாரும் நிகழ்ச்சி நடத்தி வசூலித்த பொது ரஜினி மட்டுமே தன் சொந்த பணம் 5 லட்சம் கொடுத்தார். வருடம் தோறும் தமிழக்த்தில் உள்ள அனாதை குழந்தைகளுக்கு இனிப்பு,பட்டாசு,புத்தாடை வழங்குகிறார்.

ரஜினி பல லட்சம் மதிப்புள்ள மண்டபத்தை வாழவைத்த தமிழக மக்களுக்கு எழுதிக்கொடுத்த போதும் குற்றம் கண்டுபிடித்த நீங்கள் இப்போது அதில் வருமானத்தை வைத்து எவ்வளவு குழந்தைகளை படிக்க வைக்கிறார் என்று தெரியுமா? கொடுத்தாலும் குற்றம் கண்டுபிடிபிடிக்கும் உங்களுக்கு ரஜினியை கர்நாடகக்காரன் என்று விமர்சிப்பதை விட வேறு என்ன தெரியும்.

ரஜினியை பற்றி கூறும் போது எல்லாம் கர்நாடக்காரன் என்று கூறும் உங்களை போன்றவர்கள் இருக்கும் வரை ஜாதி,மத சன்டைகளை எப்படி ஒழிக்க முடியும்.

//உண்மையிலேயே மானமிழந்த ஈனப்பிறவிகள் சில இருக்கத்தான் செய்கின்றன//. உங்களை நீங்களே இப்படி கூறிக்கொள்வது வருத்தமாக உள்ளது. ஓட்டு போட்டு மந்திரியாக்கியவர்களிடம் எதும் கேட்க வக்கற்றவர்கள் தன்னால் முடிந்ததை செய்கிற மணிதனிடம் மட்டும் அதை செய், இதை ஏன் செய்ய வில்லை என கேட்பது அசிங்கமாக உள்ளது.

நாம் ஒன்றும் ரஜினிக்கு பணம் சும்மா கொடுக்க வில்லை. படம் பிடித்திருந்தால் போய் படம் பார்க்கிறோம் அவ்வளவு தான். ரஜினி என்ன உண்டியல் வைத்து வசுலித்தா ஏமாற்றி விட்டார். ரஜினியை விமர்சிக்கும் உங்களை எல்லாம் கேட்கிறேன் உங்களுடைய சம்பளத்தில் எவ்வளவு அடுத்தவர்களுக்கு எதிர்பார்ப்பிண்றி செலவு செய்திருப்பீர்கள்.
Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

9 Comments:

  • At 6:40 AM, Blogger Unknown said…

    ரொம்ப டென்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ஷனா இருக்கிங்க போல. ஒரு க்ளாஸ் மோர் குடிச்சிட்டு அடுத்தப் பதிவு போடுங்க :-P

     
  • At 8:06 AM, Blogger வெங்காயம் said…

    ராஜா ராமதாஸ் அவர்களே....

    என் பதில் இங்கே...

    http://thamizhinam.blogspot.com/2005/08/blog-post_112420396361907924.html

     
  • At 1:36 AM, Blogger enRenRum-anbudan.BALA said…

    காவிரிப் பிரச்சினையில், பதவியில் இருந்தும் ஒரு புல்லைக் கூட பிடுங்கிப் போட முடியாத அரசியல்வியாதிகளை
    (எல்லோரையும் சேர்த்துத் தான் சொல்கிறேன்!) தலை மேல் வைத்து கொண்டாடியபடி, ரஜினி காவிரிப் பிரச்சினைக்கு என்ன செய்தார் என்று கேட்பது அபத்தமாக இருக்கிறது.

    'உருப்படாத' நடிகர்கள் என்று கூக்குரலிடும்போது, அவர்களை விட பல விடயங்களில் மக்களை ஏமாற்றும்/இம்சிக்கும் அரசியல்வாதிகள் தான் மக்கள் நினைவுக்கு வந்து தொலைக்கிறார்கள். என்ன செய்வது? அதனால் தான், மக்களுக்கு
    கொஞ்சமாவது சந்தோஷம் தரும் நடிகர்கள் மேல் வெறுப்பு இல்லை, மாறாக ஆதரவு இருப்பதை நாம் பார்க்கிறோம் இல்லையா ?????

     
  • At 5:27 AM, Blogger ஜெ. ராம்கி said…

    //ரஜினி ரசிகன் என்று சொன்னால் அவன் பைத்தியக்காரன் என்று அவன் பெற்றோர்களே சொல்கிற மாதிரிதானே ரசிகர்கள் இருக்கிறார்கள்.//

    Appadiya ?!

     
  • At 12:08 PM, Anonymous Anonymous said…

    Re://ரஜினி ரசிகன் என்று சொன்னால் அவன் பைத்தியக்காரன் என்று அவன் பெற்றோர்களே சொல்கிற மாதிரிதானே ரசிகர்கள் இருக்கிறார்கள்.//

    தமாசு...தமாசு...

    வவுத்த வலீக்குது

     
  • At 12:12 PM, Anonymous Anonymous said…

    Thamilan Tamilanu arasiyalvadhinga molgai araithadhu padhadunu ivanunga vera inayathula kelampittanunga,
    Enda sorana ketta nayingala oru karnataka karankitta kaveri thanni kekkirengele adhukku avanoda .....
    kudikkalamula,Engada pochi unga thanmanam,pongada poy velya parunga

     
  • At 8:25 AM, Anonymous Anonymous said…

    ரஜினி ரசிகனின் புலம்பல்:

    சூப்பர் ஸ்டாராய் ஜொலித்தவன் பேப்பர் ஸ்டாரா ஆனானே!
    மாவீரனாய் கர்ச்சித்தவன் மாபேடியாய் ஆனானே!
    முத்துவாய் மின்னியவன் சொத்தையாய் ஆனானே!
    தளபதியாய் நடந்தவன் கிழபதியாய் ஆனானே!
    சந்தனமாய் மனந்தவன் சாக்கடையாய் ஆனானே!
    கோபுரத்தில் இருந்தவன் கூவத்தில் வீழ்ந்தானே!
    காசுக்காக வாழ்தானே காமெடியன் ஆனானே!
    பல்டி அடித்தானே பதராக போனானே!
    மன்னிப்பு கேட்டானே மனம்கெட்டு போனானே!
    போனானே போனானே வீணாய்ப் போனானே!

     
  • At 8:25 AM, Anonymous Anonymous said…

    ரஜினி ரசிகனின் புலம்பல்:

    சூப்பர் ஸ்டாராய் ஜொலித்தவன் பேப்பர் ஸ்டாரா ஆனானே!
    மாவீரனாய் கர்ச்சித்தவன் மாபேடியாய் ஆனானே!
    முத்துவாய் மின்னியவன் சொத்தையாய் ஆனானே!
    தளபதியாய் நடந்தவன் கிழபதியாய் ஆனானே!
    சந்தனமாய் மனந்தவன் சாக்கடையாய் ஆனானே!
    கோபுரத்தில் இருந்தவன் கூவத்தில் வீழ்ந்தானே!
    காசுக்காக வாழ்தானே காமெடியன் ஆனானே!
    பல்டி அடித்தானே பதராக போனானே!
    மன்னிப்பு கேட்டானே மனம்கெட்டு போனானே!
    போனானே போனானே வீணாய்ப் போனானே!

     
  • At 4:15 AM, Anonymous Anonymous said…

    oru elavum therilanaalum therinja maari pesuraanunga muttaaa koooooooooo............... muttaigal..

     

Post a Comment

<< Home