பத்த வச்சுட்டியே பரட்டை.

Monday, August 22, 2005

சிங்கம் ஒன்று புறப்பட்டதே

இதோ பல பிரச்சனைகள் இருந்தாலும் மக்கள் கவலைகளை போக்கும் சக்தி சினிமாவுக்கு உண்டு அதுவும் ரஜினி சினிமாவுக்கு அந்த சக்தி அளவுக்கு அதிகமாக உண்டு என்பதை மீன்டும் நிருபித்தது ரஜினியின் புதிய பட அறிவிப்பு.

முதல்வன் படக்கதை ரஜினிக்காக உருவாக்கப்பட்ட கதை என இயக்குனர் சங்கர் சொன்னதிலிருந்து ரஜினி படத்தை சங்கர் இயக்குவாரா என்ற எதிர்பார்ப்பு ரஜினி ரசிகர்களிடம் இருந்தது.இதோ அந்த எதிர்பார்ப்பு நிறைவேறிவிட்டது. அதுவும் இந்த படம் ரஜினி பார்முலா படி இருக்கும் என்பது ரஜினி ரசிகர்களுக்கு கூடுதல் சந்தோசம்.

1996 தேர்தலில் ரஜினியுடன் சேர்ந்து முத்து படத்தின் ஒருவன் ஒருவன் முதாலளி பாடல் இசை முக்கிய பங்காற்றியது. அதுபோல இந்த படம் 2006 தேர்தல் சமயத்தில் வெளிவரவிருக்கிறது. எனவே இந்த படத்தில் அரசியல் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எதோ திட்டமிருக்கு என ரசிகர்கள் எதிர்பார்க்கவும், 40 தொகுதிகளையும் வென்று விட்டோம் என் ஆட்டம் போட்ட அரசியல்வாதிகளும் எதிர்பார்க்க தொடங்கிவிட்டனர்.

தமிழகத்தில் 234 தொகுதிகளையும் சேர்த்து உலகம் முழுவதும் கலக்க வருகிறார் சிவாஜிராவ்.

பகையே நீ துள்ளாதே
இவர் போகும் வழியில் நில்லாதே
சீறும் சிங்கம் இவரல்லோ!
Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

7 Comments:

  • At 3:56 AM, Anonymous Anonymous said…

    //40 தொகுதிகளையும் வென்று விட்டோம் என் ஆட்டம் போட்ட அரசியல்வாதிகளும் எதிர்பார்க்க தொடங்கிவிட்டனர்//
    யாரைச் சொல்ரீரு??
    திருவாரூர் முத்துவேலர் கருணாநிதியவா?? இல்ல மருத்துவர் அய்யாவயா?இல்ல கலிங்கத்துச் சிங்கத்தையா??இல்ல காம்ரேடுகளையா??

     
  • At 4:29 AM, Blogger வீ. எம் said…

    ஒரு போஸ்டர்ல ஓரமா தலைவர் போட்டோ போட்டதுக்கே ஒருத்தரை கட்சிய விட்டு கட்டம் கட்டுனாங்களே... அவங்கள விட்டுடீட்ஙகளே!!

    அப்புறம் ராஜா,
    உங்க location la tanil nadu னு இருக்கு அதை correct பன்னிடுங்க!

    வீ எம்

     
  • At 7:21 AM, Blogger ENNAR said…

    அவர் கலக்க வருவது இருக்கட்டும் படசுருள் பெட்டியை யாரும் களவாடாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
    சிவாஜிராவ் சிவாஜிராவ் தான்

    என்னார்

     
  • At 7:22 AM, Anonymous Anonymous said…

    சிவாஜிராவ் யார்

    வளர்ந்தவன்

     
  • At 9:09 AM, Anonymous Anonymous said…

    //உங்க location la tanil nadu னு இருக்கு அதை correct பன்னிடுங்க!//

    இந்தத் தவறுகள் விடாமல் எப்படீங்க ரசனி ரசிகனா இருப்பது?

     
  • At 9:38 PM, Blogger Raja said…

    கொடி பறக்குது ஈரோடு சிவகிரி
    //யாரைச் சொல்ரீரு??
    திருவாரூர் முத்துவேலர் கருணாநிதியவா?? இல்ல மருத்துவர் அய்யாவயா?இல்ல கலிங்கத்துச் சிங்கத்தையா??இல்ல காம்ரேடுகளையா?//
    ஆண்டிப்பட்டி அரசியாரையும் சேர்த்து தான்.
    வீ எம் தவறை சுட்டி காட்டியதற்கு நண்றி.

     
  • At 9:26 PM, Blogger Ganesh Gopalasubramanian said…

    பத்தவச்சிட்டியே பரட்டை.... சரியான கேப்சனுங்கோ

     

Post a Comment

<< Home