உப்பிட்ட தமிழ் மன்னை மறக்காததால் தான் இது வரை தமிழன் பிரச்சனைக்கு மட்டும் குரல் கொடுக்கிறார். கலவரநிதி,வெள்ள நிதி என அவர் பணம் வழங்கியது எல்லாம் தமிழ் நாட்டுக்கு மட்டும் தான்.
காவிரி பிரச்சனை வருவதற்கு காரணம் ரஜினி மாதிரி அல்லவா பேசுகிறீர்கள். என்றைக்காவது கர்நாடகத்திற்கு ஆதரவாக குரல் கொடுத்திருக்கிறாரா.
ஜாதி,மதம் மட்டும் அல்லாமல் காவிரி,தமிழ் என கிடைத்ததை எல்லாம் வைத்து அரசியல் பண்ணும் அரசியல்வாதிகளை பற்றி கவலைப் பாடாத நீங்கள் ரஜினியை மட்டும் விமர்சிப்பது ஏன்.
எனக்கு MGR பிடித்த காலத்தில் கூட கலைஞர் பேச்சு தான் பிடிக்கும். அதற்காக அவர் கூறும் கருத்துக்கள் எல்லாம் ஏற்றுக் கொள்கிறேன் என்று அர்த்தம் அல்ல. வட்டாள் நாகராஜ் கூட தன் பிள்ளைகளை ஊட்டி கான்வென்டில் தான் படிக்க வைக்கிறார்.இங்குள்ள அரசியல்வாதிகளைப் போல.
கார்கில் நிதிக்கு கூட
எல்லாரும் நிகழ்ச்சி நடத்தி வசூலித்த பொது ரஜினி மட்டுமே தன் சொந்த பணம் 5 லட்சம் கொடுத்தார். வருடம் தோறும் தமிழக்த்தில் உள்ள அனாதை குழந்தைகளுக்கு இனிப்பு,பட்டாசு,புத்தாடை வழங்குகிறார்.
ரஜினி பல லட்சம் மதிப்புள்ள மண்டபத்தை வாழவைத்த தமிழக மக்களுக்கு எழுதிக்கொடுத்த போதும் குற்றம் கண்டுபிடித்த நீங்கள் இப்போது அதில் வருமானத்தை வைத்து எவ்வளவு குழந்தைகளை படிக்க வைக்கிறார் என்று தெரியுமா?
கொடுத்தாலும் குற்றம் கண்டுபிடிபிடிக்கும் உங்களுக்கு ரஜினியை கர்நாடகக்காரன் என்று விமர்சிப்பதை விட வேறு என்ன தெரியும்.
ரஜினியை பற்றி கூறும் போது எல்லாம் கர்நாடக்காரன் என்று கூறும் உங்களை போன்றவர்கள் இருக்கும் வரை ஜாதி,மத சன்டைகளை எப்படி ஒழிக்க முடியும்.
//உண்மையிலேயே மானமிழந்த ஈனப்பிறவிகள் சில இருக்கத்தான் செய்கின்றன//. உங்களை நீங்களே இப்படி கூறிக்கொள்வது வருத்தமாக உள்ளது.
ஓட்டு போட்டு மந்திரியாக்கியவர்களிடம் எதும் கேட்க வக்கற்றவர்கள் தன்னால் முடிந்ததை செய்கிற மணிதனிடம் மட்டும் அதை செய், இதை ஏன் செய்ய வில்லை என கேட்பது அசிங்கமாக உள்ளது.
நாம் ஒன்றும் ரஜினிக்கு பணம் சும்மா கொடுக்க வில்லை. படம் பிடித்திருந்தால் போய் படம் பார்க்கிறோம் அவ்வளவு தான். ரஜினி என்ன உண்டியல் வைத்து வசுலித்தா ஏமாற்றி விட்டார். ரஜினியை விமர்சிக்கும் உங்களை எல்லாம் கேட்கிறேன்
உங்களுடைய சம்பளத்தில் எவ்வளவு அடுத்தவர்களுக்கு எதிர்பார்ப்பிண்றி செலவு செய்திருப்பீர்கள்.