பத்த வச்சுட்டியே பரட்டை.

Monday, August 22, 2005

சிங்கம் ஒன்று புறப்பட்டதே

இதோ பல பிரச்சனைகள் இருந்தாலும் மக்கள் கவலைகளை போக்கும் சக்தி சினிமாவுக்கு உண்டு அதுவும் ரஜினி சினிமாவுக்கு அந்த சக்தி அளவுக்கு அதிகமாக உண்டு என்பதை மீன்டும் நிருபித்தது ரஜினியின் புதிய பட அறிவிப்பு.

முதல்வன் படக்கதை ரஜினிக்காக உருவாக்கப்பட்ட கதை என இயக்குனர் சங்கர் சொன்னதிலிருந்து ரஜினி படத்தை சங்கர் இயக்குவாரா என்ற எதிர்பார்ப்பு ரஜினி ரசிகர்களிடம் இருந்தது.இதோ அந்த எதிர்பார்ப்பு நிறைவேறிவிட்டது. அதுவும் இந்த படம் ரஜினி பார்முலா படி இருக்கும் என்பது ரஜினி ரசிகர்களுக்கு கூடுதல் சந்தோசம்.

1996 தேர்தலில் ரஜினியுடன் சேர்ந்து முத்து படத்தின் ஒருவன் ஒருவன் முதாலளி பாடல் இசை முக்கிய பங்காற்றியது. அதுபோல இந்த படம் 2006 தேர்தல் சமயத்தில் வெளிவரவிருக்கிறது. எனவே இந்த படத்தில் அரசியல் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எதோ திட்டமிருக்கு என ரசிகர்கள் எதிர்பார்க்கவும், 40 தொகுதிகளையும் வென்று விட்டோம் என் ஆட்டம் போட்ட அரசியல்வாதிகளும் எதிர்பார்க்க தொடங்கிவிட்டனர்.

தமிழகத்தில் 234 தொகுதிகளையும் சேர்த்து உலகம் முழுவதும் கலக்க வருகிறார் சிவாஜிராவ்.

பகையே நீ துள்ளாதே
இவர் போகும் வழியில் நில்லாதே
சீறும் சிங்கம் இவரல்லோ!
Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Tuesday, August 16, 2005

ரஜினியை விமர்சிப்பவர்களுக்கு

உப்பிட்ட தமிழ் மன்னை மறக்காததால் தான் இது வரை தமிழன் பிரச்சனைக்கு மட்டும் குரல் கொடுக்கிறார். கலவரநிதி,வெள்ள நிதி என அவர் பணம் வழங்கியது எல்லாம் தமிழ் நாட்டுக்கு மட்டும் தான்.

காவிரி பிரச்சனை வருவதற்கு காரணம் ரஜினி மாதிரி அல்லவா பேசுகிறீர்கள். என்றைக்காவது கர்நாடகத்திற்கு ஆதரவாக குரல் கொடுத்திருக்கிறாரா.ஜாதி,மதம் மட்டும் அல்லாமல் காவிரி,தமிழ் என கிடைத்ததை எல்லாம் வைத்து அரசியல் பண்ணும் அரசியல்வாதிகளை பற்றி கவலைப் பாடாத நீங்கள் ரஜினியை மட்டும் விமர்சிப்பது ஏன்.

எனக்கு MGR பிடித்த காலத்தில் கூட கலைஞர் பேச்சு தான் பிடிக்கும். அதற்காக அவர் கூறும் கருத்துக்கள் எல்லாம் ஏற்றுக் கொள்கிறேன் என்று அர்த்தம் அல்ல. வட்டாள் நாகராஜ் கூட தன் பிள்ளைகளை ஊட்டி கான்வென்டில் தான் படிக்க வைக்கிறார்.இங்குள்ள அரசியல்வாதிகளைப் போல.

கார்கில் நிதிக்கு கூட எல்லாரும் நிகழ்ச்சி நடத்தி வசூலித்த பொது ரஜினி மட்டுமே தன் சொந்த பணம் 5 லட்சம் கொடுத்தார். வருடம் தோறும் தமிழக்த்தில் உள்ள அனாதை குழந்தைகளுக்கு இனிப்பு,பட்டாசு,புத்தாடை வழங்குகிறார்.

ரஜினி பல லட்சம் மதிப்புள்ள மண்டபத்தை வாழவைத்த தமிழக மக்களுக்கு எழுதிக்கொடுத்த போதும் குற்றம் கண்டுபிடித்த நீங்கள் இப்போது அதில் வருமானத்தை வைத்து எவ்வளவு குழந்தைகளை படிக்க வைக்கிறார் என்று தெரியுமா? கொடுத்தாலும் குற்றம் கண்டுபிடிபிடிக்கும் உங்களுக்கு ரஜினியை கர்நாடகக்காரன் என்று விமர்சிப்பதை விட வேறு என்ன தெரியும்.

ரஜினியை பற்றி கூறும் போது எல்லாம் கர்நாடக்காரன் என்று கூறும் உங்களை போன்றவர்கள் இருக்கும் வரை ஜாதி,மத சன்டைகளை எப்படி ஒழிக்க முடியும்.

//உண்மையிலேயே மானமிழந்த ஈனப்பிறவிகள் சில இருக்கத்தான் செய்கின்றன//. உங்களை நீங்களே இப்படி கூறிக்கொள்வது வருத்தமாக உள்ளது. ஓட்டு போட்டு மந்திரியாக்கியவர்களிடம் எதும் கேட்க வக்கற்றவர்கள் தன்னால் முடிந்ததை செய்கிற மணிதனிடம் மட்டும் அதை செய், இதை ஏன் செய்ய வில்லை என கேட்பது அசிங்கமாக உள்ளது.

நாம் ஒன்றும் ரஜினிக்கு பணம் சும்மா கொடுக்க வில்லை. படம் பிடித்திருந்தால் போய் படம் பார்க்கிறோம் அவ்வளவு தான். ரஜினி என்ன உண்டியல் வைத்து வசுலித்தா ஏமாற்றி விட்டார். ரஜினியை விமர்சிக்கும் உங்களை எல்லாம் கேட்கிறேன் உங்களுடைய சம்பளத்தில் எவ்வளவு அடுத்தவர்களுக்கு எதிர்பார்ப்பிண்றி செலவு செய்திருப்பீர்கள்.
Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Thursday, August 11, 2005

ரஜினி - 31

ஆகஸ்ட் 15 ஒவ்வொரு இந்தியனும் பெருமைப்படும் நாள். ஆனால் தமிழ் சினிமா ரசிகன் மட்டும் சற்று அதிகமாக சந்தோசப் படும் நாள். ஆம் ஒரு கருப்பு உருவம் (வைரம்) அபூர்வ ராகங்களில் கதவைத் திறந்த நாளும் ஆகஸ்ட் 15 தான்(Aug 15-1975).


அன்று ரஜினி நினைத்திருப்பார் நான் என் வாழக்கைக்கான கதவை திறக்கிறேன் என்று. ஆனால் உன்மையில் அவர் திறந்தது தமிழ் சினிமாவை இந்தியவுக்கு மட்டும் அல்ல உலகம் முழுவதும் அறிமுகப்படுத்த திறந்த கதவு. முதல் காட்சியிலேயே ஒரு அசத்தாலான அறிமுகம் கொடுத்தவர் பாலசந்தர்.





இதோ ஆயிரமாயிரம் நட்சத்திரங்கள் தமிழ் திரைக்கு தோன்றினாலும் 30 வருடமாக சூப்பர் ஸ்டாராக மின்னிக் கொண்டிருக்கிறார். 6 மாதம் எந்த ஒரு நடிகரும் படம் வெளியிடவில்லை என்றால் அவரை ரசிகர்கள் மறக்கும் காலத்திலும் 3 வருடத்திற்கு ஒரு படம் வெளியிட்டும் எப்போதும் மக்கள் விரும்பும் சூப்பர் ஸ்டாராக இருப்பது ரஜினியால் மட்டுமே முடியும்.


தமிழ் சினிமாவோடு தமிழையும் வளர்க்கும் சக்தி உங்களுக்கு மட்டுமே உண்டு. இதோ ஒசாக(ஜப்பான்) பல்கலைகழகத்தில் தமிழை விருப்ப பாடாமாக் அறிமுகப்படுத்த முயற்சிகள் நடைபெறுகினறன.உங்கள் படங்களுக்கு சங்க இலக்கியத்டை விட அதிகமாக தமிழ் வளர்க்கும் சக்தி உண்டு.

மனிச்ந்திரதாழ்,ஆப்தமித்ரா என்னும் படங்கள் கேரளா,ஆந்திராவில் மட்டும் HIT ஆக சந்திரமுகியோ இந்தியாவில் மட்டுமல்லாமல் உலகெங்கும் வெற்றி பெற்றிருப்பதற்கு காரணம் சூப்பர் ஸ்டார் மட்டுமே. நீங்கள் படம் நடித்தால் சாதனைகளை நீங்கள் துரத்த தேவையில்லை. சாதனைகள் வந்து குவியும் உங்கள் படத்தை தேடி.

திரையுலகில் 31 வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் உன்னால் தமிழும் தமிழ் சினிமாவும் மேலும் வளரட்டும் என வாழ்த்துகிறோம்.


உங்களோட ராசி மட்டும் எல்லாருக்கும் சேரும்.

உங்களால மட்டும் எல்லாருக்கும் லாபம்.

JAIHIND.

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.