பத்த வச்சுட்டியே பரட்டை.

Monday, August 11, 2008

ஞாநிக்கு குட்டு மட்டும்

ரஜினியை பார்த்து பரிதாபப்படும் ஞாநி அவர்களுக்கு,

ரஜினி முள்ளும் மலரும் படத்திலே கூட ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் எனக்கு கவலை இல்லை என பாடினர். அது போல பல பழைய படங்களில் அரசியல் வசனம் வரும். அப்போது அது அரசியலாக்க படவில்லை. ஆனால் எப்ப வருவேன் எப்படி வருவேன் என்று கூறியதை அரசியலாக்கி ஆதாயம் தேடியது உங்களை போன்ற மீடியா தான். அந்த வசனம் ஒரு முறை தான் படத்தில் வரும். ஆனால் அதை வைத்து எத்தனை கட்டுரை எழுதி சம்பாதித்திருக்கும் உங்கள் மீடியா.

நான் வந்தா என்ன வராட்டி என்ன? நீங்க உங்க வேலையைப் பாத்துகிட்டுப் போகவேண்டியதுதானே'' என்கிறார் ரஜினி. ரஜினி தெளிவாக பேசுவதில்லை என்று கூறும் உங்களை போன்றவர்கள் ரஜினியின் மீது கவனத்தை திருப்பியது ஏன் என்று தெரியவில்லை. உங்களால் போக முடியாயது ஏன் என்றால் பிழைக்க ரஜினி வேண்டும்.

//உங்கள் பேச்சுக்கு, அப்போது நீங்கள் பேசிய மறுநாளே, கர்நாடகத்திலிருந்து கன்னட வெறிச் சக்திகளிடமிருந்து கண்டனம் வந்துவிட்டது. ஆனால் அப்போது நீங்கள் ஏன் இந்த விளக்கத்தை அளிக்கவில்லை ? இத்தனை மாதம் கழித்து இப்போதுதான் விளக்கமும் வருத்தமும் வருகிறது. ஏன் ?//

ரஜினி இந்த பதிலை அடுத்த நாளே கன்னட தொலைக்காட்சிக்கு தெளிவாக கூறி உள்ளார். உங்களுக்க கன்னடம் புரியவில்லையா/ அல்லது ஆங்கிலம் கூட புரியவில்லையா இல்லை ரஜினியை விமர்சிப்பதற்காக மறைத்து விட்டிர்களா? குமுதம் தவிர வேற ஏதும் படிப்பதில்லையா. குமுதமும் சேர்ந்து மறைத்து விட்டதா

இதற்கு தாங்கள் அடுத்த இதழில் பதில் சொல்ல தயாரா?


ரஜினி இமையமலை செல்ல தேவை இருக்காது என்று சொல்லி உள்ளிர்கள். ரஜினிக்கு தேவை இருக்காது ஆனால் குமுதத்துக்கு பாபா குகை என 10 issue போட்டு காசு பாக்க வேண்டிய கட்டாயம் இருக்குமே.

சூப்பர் ஸ்டார் இமேஜ் ஒகேனக்கல் வெள்ளத்தில் அடித்துப் போய்விட்டதாக சொல்லி உள்ளிர்கள். இதற்கு முன்பே ரஜினி சொன்ன பதிலை ஞாபக
படுத்துகிறேன். பாபா படம் எதிர்பார்த்த வசூல் இல்லாத போது காவி பிரச்சனையில் ரஜினியை தனிமைப் படுத்த உங்களை போன்றவர்கள்
முயற்சித்த போது ரஜினி சொன்ன பதில் "ஒரு படம் சரியாயாக போக
வில்லை என்றால் சூப்பர் ஸ்டார் அந்தஸ்து போய் விடுமா அப்படி போய்விடும் என்றால் அந்த பட்டம் எனக்கு தேவை இல்லை என்று கூறினார். ரஜினிக்கு சூப்பர் ஸ்டார் அந்தஸ்து கொடுத்தது ரசிகர்கள். அதை கொடுக்கவும் எடுக்கவும் ரசிகர்களுக்கு மட்டும் தான் உரிமை உண்டு.

உங்களை போன்றவர்களுக்கு ரஜினியை புரிய வைக்க வேண்டிய அவசியம் எங்களுக்கு தேவை இல்லை. ஏன் என்றால் உங்களை போன்றவர்கள் துங்குவதை போல நடிப்பவர்கள்.

உங்களுக்கு மட்டும் அல்ல மீடியாவுக்கும் ஒரு கேள்வி ரஜினியை வைத்து பிழைக்க மாட்டோம் என தெளிவான் உறுதியான முடிவு எடுக்க தயாரா?ரஜினி படத்தில் சில இடங்ககளில் ஆபாசமான காட்சிகள வருவதாக குறை கூறி உள்ளிர்கள். குமுதத்தில் ஆபாசமான படங்ககள் இருந்தால் ஒ பக்கங்ககள் எழுத மாட்டேன் என விகடனை விட்டு விலகியதை போல குமுதத்தை விட்டு விலகி ஆபாச/சினிமா நடிகை கவர்ச்சி படம் இல்லாத பத்திரிகையில் மட்டும் எழுதுவேன் என உறுதியான முடிவு எடுக்க தயாரா?

ரஜினியின் ஆதரவு யாருக்கு அல்லது அரசியலுக்கு வருவாரா என குமுதம் கட்டுரை எழுதினால் அதை குமுதம் ஒ பக்கத்தில் விமர்சிக்கும் பலம் உங்களுக்கு உள்ளதா.

கேள்விகளுக்கு பதில் கிடைத்தால் நான் நேரடியாக பூச்செண்டு கொடுக்கிறேன்


உங்களுக்காக எங்களது ஒரே பதில்
ரஜினியிடம் தோற்ப்பதற்கு உங்களை போல் காத்திருப்பவர் எத்தனை பேரோ?
Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Sunday, August 10, 2008

விகடனுக்கு சுளீர்

ரஜினி சென்னை போராட்டத்திற்கு பேசிய மறுநாள் கொடுத்த கன்னட தொலைக்காட்சிக்கு கொடுத்த பேட்டியில் 'கன்னட மக்கள் அனைவரையும் உதைக்க வேண்டும் என சொல்ல நான் என்ன முட்டாளா வன்முறையில் ஈடுபடுகிறவர்களை தான் உதைக்க வேண்டும் என்று சொன்னனே" என்று விளக்கமளித்தார்

இப்போதும் நான் பேசியது தவறாக புரிந்து கொள்ள பட்டது அதனால் இனிமேல் சரியாக யோசித்து பேசுகிறேன். அதனால் என் படத்தை கர்நாடகாவில் ரிலிஸ் செய்ய அனுமதிக்க வேண்ண்டும் என வேண்டுகோள் கொடுத்தார்.

போராட்ட அடுத்த நாள் கொடுத்த விளக்கத்திற்கும் இப்போது கொடுத்த விளக்கத்திற்கும் பெரிய வித்தியாசம் இல்லை. ஆனால் இப்போது குசேலன் படம் வெளியானதால் அதை பிரச்சனையாக்கி ஆதாயம் தேட மோசமாக 'ரஜினிக்கு சுளீர்" என கட்டுரை எழுதி உள்ளிர்கள். எல்லாரும் ரஜினியை திட்டி எழுதுகிறார்கள் அதனால் கூட்டத்தோடு கூட்டமா நீங்களும் கட்டுரை எழுதி உங்கள் தமிழ் பற்றை(?) காட்டி கொண்டிர்கள்.

ஜெயலலிதா காவிரி பிரச்சனைக்காக உன்னாவிரதம் இருந்த பொது மலர்செண்டு கொடுத்ததர்க்காக பாலச்சந்தர் தயாரிப்பில் உருவான அண்ணாமலை படத்தை ரிலிஸ் செய்ய பிரச்சனை பண்ணினார்கள். ரஜினி சுயநலவதியாக இருந்தால் மலர்செண்டு கொடுத்தர்க்கே படம் ரிலிசுக்கு பிரச்சனை பண்ணியவர்கள் உதைப்பேன் என்று சொன்னால பிரச்சனை பண்ணுவார்கள் என்று யோசிக்கமலா பேசியிருப்பார்.

காவிரி நடுவர் மன்ற தீர்ப்பு தமிழகத்துக்கு சாதகமா வந்துவிட்டது என் கருதி சிவாஜி பட ரிலிஸ் பண்ணும் போது பிரச்சனை பண்ணினார்கள். அது ரஜினிக்கு எதிரான பிரச்சனையா இல்லை தமிழ் படத்திக்கு எதிரான பிரச்சனையா? அவர்கள் ரஜினிய தமிழனாக கருதியதால் தான் சிவாஜி படத்திற்கு எதிராக பிரச்சனை பண்ணினார்கள். தமிழ் மீடியா மட்டும் தான் ரஜினி தமிழனா என 30 வருடமாக சோதித்து கொண்டிருக்கிறது.

குசேலன் கர்நாடக ரைட்ஸ் ரஜினிக்கு போகும் அதனால் தான் வருத்தம் தெரிவித்தார் என்றால் ரஜினி ராகவேந்திரா மண்டபம் மற்றும் தமிழக மக்களுக்கு செய்த உதவியை ஒப்பிடும் பொது அந்த பணம் தூசி தான். விகடனை போல வாசகர்களிடம் வசூல் பண்ணி நிதி கொடுப்பதை போல இல்லாமல் ரஜினி தன் சொந்த பணத்தில் நிதி வழங்கியவர். இது கூட தெரியாமல் ரஜினிக்கு சுளீர் கொடுக்கிறாராம் ஒரு ரிப்போர்டர் அதை ஒரு ஆசிரியர் அப்ருவ் பன்னுரரம். கிசு கிசு எழுதுனவர்களிடம் கட்டுரை எழுத சொன்னால் இதை தான் எழுதுவார்கள்

ரஜினிக்கு தமிழ் பற்று இல்லை அதனால் தான் மன்னிப்பு கேட்டு விட்டதாகா நிங்கள் கருதினால் ரஜினியை பத்தி விகடனில் எழுதாமல் இருக்க நீங்ககள் தயாரா? ரஜினி பாபா படம் எதிர்பார்த்த அளவுக்கு வசூல் ஆகவில்லை என பணம் திருப்பி கொடுத்தார் அதுபோல் உருப்படியில்லாத உங்கள் இதழை வாங்கிய எங்களுக்கு பணம் திருப்பி கொடுக்க தயாரா?

இதுபோல் கட்டுரை எழுதிய உங்களுக்கு சுளீர் கொடுப்பதை விட விகடனையும் படிக்காமல் விடுவது தான் உத்தமம்.
Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.