பத்த வச்சுட்டியே பரட்டை.

Tuesday, September 28, 2004

சிங்கப்பூரில் கமல் - கன்டனம்

இப்பொதெல்லாம் தரமான தமிழ்ப் படங்கள் குறைந்து விட்டன. நல்ல படம் வரும்வரை படமே பார்ப்பதில்லை என்ற முடிவுக்கு மக்கள் வந்ததால் தான் வழிபிறக்கும்.

தமிழை சாகடித்து ஆங்கில மோகத்தை வளர்ப்பது கொடுரம். தொலைக்காட்சி அறிவிப்பாளர்கள் தமிழை குதறுகிறார்கள்.
என் படங்களுக்கு நான் ஆங்கில தலைப்புகள் வைப்பதில்லை. தமிழ் திரைப்படம் என்னை ஏன் பின்பற்ற வில்லை.

இன்னும் பலவாறுதமிழ் நாட்டையும்,தமிழர்களையும் விமர்சித்தது தமிழ்நாட்டில் அல்ல சிங்கப்பூரில் என்பதுதான் வேதனையான் விசயம்.

இதை பொறுக்காமல் ஒரு தமிழர் உஙகளை பற்றி பெருமையாக நினைத்தேன் ஏன் சார் நமது தமிழ் நாட்டையும், நமது தமிழர்களையும் இங்கு வந்து கேவலமாக பேசுகிறிர்கள் என கேள்வி கேட்டு விட்டு அரங்கத்தை விட்டு சில தமிழர்க்ளோடு வெளியேறினார்.

கமல் சார் அவர்களே சிஙகப்பூரில் தமிழர்களை பற்றி பெருமையாக பேச எந்த விசயமும் இல்லையா ? இல்லை சாதனை(?) தமிழன் தாங்கள் தான் என்ற மமதையா.

உங்கள் படத்தை யாரும் பின்பற்ற வில்லை என கூறுகிறீர்களே உங்கள் படத்தில் அனைவரும் பின்பற்ற என்ன தகுதிகள் உள்ளன. உங்கள் படத்தில் வரும் அபாசத்தை தவிர நீங்கள் சென்னை தமிழ் என்று கூறி தமிழை சாகடித்த படங்கள் எத்தனையோ.

உங்கள் படம் என்றவுடன் முத்த காட்சிகள் தான் நினைவு வருகிறது. உஙகள் பட நாயகிகள் எல்லாம் ஒப்பந்தம் செய்யப் பட்டதும் முதலில் பேட்டி கொடுப்பது முத்த காட்சியை பற்றித்தான். நடிகைகளுக்கு முத்தம் கொடுக்க அலையும் தாங்கள் அதைபற்றி என்றாவது நினைத்துப்பார்பது உண்டா?

நல்ல படம் வரும்வரை படமே பார்ப்பதில்லை என்ற முடிவுக்கு மக்கள் வந்ததால் தான் வழிபிறக்கும் என்ற உங்கள் சொல்லின் படிதான் நாங்கள் உங்கள் படத்தை பார்ப்பது இல்லை ஆனாலும் நீங்கள் அதை பற்றி கவலை படாதபோது நாங்கள் என்ன செய்ய முடியும்.

தமிழனின் உடை வேட்டிதானே அதை படத்தில் பயன்படுத்தவிட்டாலும் பரவயில்லை விழாவுக்கு வரும்போதாவது பயன்படுத்தலாமே. ஆங்கில உடை அனியும் தாங்கள் எப்படி ஆங்கிலம் பேசுவதை விமர்சிக்கிறிர்கள். உஙகள் படத்தை சர்வதேச தரத்துக்கு (முத்த காட்சியை தவிர சர்வதேச தரம் உஙகள் படத்தில் வேறு இல்லை என்பது யாரும் அறிந்ததே)கொண்டு செல்லும் தாங்கள் அதை பார்க்கும் தமிழன் மட்டும் முன்னேறாமல் அப்படியே இருக்க வேண்டும் என்பது என்ன நியாயம்.

தங்களோடு வளர்ந்த ரஜினி கொன்டையில் தாழம்பூ,கூடையில் குஷ்பு என்று பாடிய படத்தை கூட எளிதாக வெள்ளிவிழா படாமாக இந்த தமிழர்கள் வெற்றிபெற வைத்து விடுகிறார்களே என்ற அதங்கமா?

தங்களுடைய வசூல்ராஜா என்ற படத்தில் தமிழ் வார்த்தை கிடைக்க வில்லை என்று கூறி FEELINGS என்ற வார்த்தையை கூறுகிறிர்கள் அதற்கு இனையான தமிழ் வார்த்தை இல்லையா.

ஒரு விழாவில் உங்களது மகள் ஆங்கிலத்தில் பேச உங்களது ரசிகர்கள் "பீட்டரை குறைக்க சொல் தலைவா" என கூறியும் ஆங்கிலத்தில் தொடர்ந்து பேசிய மகளுக்கு தமிழில் தான் பேச வேண்டும் என்று வற்புறுத்தவில்லையா. அல்லது உங்கள் மகளுக்கு தமிழே தெரியாதா.

தமிழர்களை சிங்கப்பூருக்கு சென்று விமர்சித்ததால் அங்குள்ளவர்கள் இனிமேல் நம் தமிழர்களை எப்படி மதிப்பார்கள். இப்படி உங்களை விமர்சித்தது உங்களை இழிவு படுத்த அல்ல இனிமேலும் வெளியிடங்களில் தமிழர்களை இழிவு படுத்தாதிர்கள் என்பதற்கு தான்.

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

9 Comments:

  • At 6:44 AM, Anonymous Anonymous said…

    விசிலடிச்சான் குஞ்சுகளிடம் இருந்து இதைதான் எதிர்பார்க்க முடியும்னு காட்டிட்டப்பு!

     
  • At 7:11 AM, Blogger Unknown said…

    கமலஹாசரு வெளில போனா இப்டில்லாம் எதுனா பேசுவாரு. உள்ளூர்ல வாய திறக்க மாட்டாரு. ஒரு நல்ல(!) படம் எடுத்தா அடுத்தது ஒரு டுபுக்கு படம் எடுக்கிறவரு இந்த மாதிரி பேசினா அப்புறம் மக்கள்ஸ் அந்த டுபுக்கு படத்தையும் பார்க்காம போய்ட்டா என்ன பண்றதுன்னு ஒரு பயம்.

     
  • At 7:14 AM, Blogger மாயவரத்தான் said…

    Anonymus...you've proved that we can ONLY expect these kinds of hide & say comments from the so-called 'talented' fans like u

     
  • At 8:44 AM, Blogger அன்பு said…

    அன்றைய கூட்டத்தில் நானும் இருந்தேன்... அப்படி அந்த இளைஞர் கூறியதும் கமல் உடனே, "...இதுல்ல வெட்கப்பட என்ன இருக்குது. அதுக்காக உண்மைய மறைக்கணும்கிறீங்களா? தமிழ்நாட்டுல பாலும் தேனும் ஓடுது, தமிழ் அருமையா பேசுராங்கன்னு பொய் சொல்லிட்டா...!? அதுக்காக இங்க சிங்கப்பூரோட சிறப்பை புகழக்கூடாதா?
    உங்களுக்கு அப்படி வெட்கமா/மானக்குறைவை நினைச்சீங்கன்னா அப்படியாவது, ஊருக்கு வாங்க - அங்க வந்து ஊர திருத்துங்க. இங்க காசு கிடைக்குதுன்னுதான வந்திருக்கீங்க. நல்ல காசு கிடைக்கும்ணா நா கூட இங்க வந்து வேலைபார்ப்பேன்"... என்று பெரும்பாலான சிங்கபூரர்களின் பலத்த்த்த்த்த.... இடியுடன் கூடிய கைதட்டல்களுடன் அந்த ரசிகரை/தமிழகத்தமிழரை விளாசினார் கமல்.

     
  • At 8:49 AM, Blogger kirukan said…

    இதைப் போல ஒரு கேவலமான பதிவைப் பார்த்ததே இல்லை. மட்டமான தனிநபர் விமர்சனம். மல்லாக்க படுத்துக்கொண்டு மண்ணை வாரிப்போடுகிறீர்கள்.

     
  • At 11:31 PM, Anonymous Anonymous said…

    சிங்கை மலேசியா தமிழர்களுடன் ஒப்பிட்டு பார்த்தால் இந்திய தமிழர்கள் தான் தமிழை சாகடிக்கிறாக்கள்.

    சிங்கை வானோலியில் (ஒலி 96.8) இந்திய தமிழர்கள் பேசினால் உடனே கண்டு பிடித்து விடலாம். அத்துனை அழகு அவர்கள் பேசும் தமிழ்(ஆங்கிலம் + தமில்).சிங்கையின் பிறந்து வளர்ந்த தமிழர்களுடன் ஒப்பிட்டு பார்த்தால் இந்திய தமிழர்கள் ????????????????

     
  • At 11:40 AM, Anonymous Anonymous said…

    This comment has been removed by a blog administrator.

     
  • At 7:37 PM, Anonymous Anonymous said…

    This comment has been removed by a blog administrator.

     
  • At 10:53 AM, Anonymous Anonymous said…

    Kamal is the no1 'peter' in tamil nadu. What ever he does is just for bandha. He can not speak tamil without mixing english word.

     

Post a Comment

<< Home